கோப்புப்படம்.  
இந்தியா

உ.பி.: வலுகட்டாயமாக நாயை மது குடிக்கவைத்த நபர் கைது

உத்தரப் பிரதேசத்தில் நாயை வலுகட்டாயமாக மது குடிக்கவைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திச் சேவை

உத்தரப் பிரதேசத்தில் நாயை வலுகட்டாயமாக மது குடிக்கவைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத்தில் நாயை கொடுமை செய்ததோடு அதனைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த நபரின் விடியோ விடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்ததாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், விடியோவில் இளைஞர் ஒருவர் நாயை துன்புறுத்தி, மதுபான பாட்டிலில் இருந்த மதுவை கட்டாயமாக குடிக்க வைப்பது பதிவாகியுள்ளது.

விடியோ இணையதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாக்பத் சமூக ஊடக பிரிவு மற்றும் ரமாலா காவல் நிலையம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு விசாரணையைத் தொடங்கின.

குற்றம்சாட்டப்பட்டவர் கிர்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்கிற பல்லம் என அடையாளம் காணப்பட்டார். பிறகு அவர் ஞாயிற்றுக்கிழமை ரமாலா காவல் நிலைய பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

A man has been arrested here for allegedly subjecting a dog to cruelty and forcing it to consume alcohol after a video of the incident surfaced online, officials said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT