குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
மும்பையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் 7 அடி நீள முதலை நுழைந்த சம்பவம் குறித்து...
மும்பையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் 7 அடி நீள முதலை ஒன்று நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த வனவிலங்கு மீட்புப் படையினர் முதலையைப் பிடித்துச் சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மும்பை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக் காடாக மாறி, குடியிருப்புப் பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே மும்பை மொரார்ஜி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் 7 அடி நீள முதலை ஒன்று புகுந்தது. உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன் அங்கு விரைந்த வனவிலங்கு மீட்புப் படையினர் முதலையை வலை மூலம் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
மும்பை புறநகரில் உள்ள போவாய் ஏரி முழுமையாக நிரம்பியதால், வெள்ள நீர் திறந்துவிடப்பட்டபோது, அதில் முதலை அடித்துக்கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்துவரும் நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் முதலை புகுந்ததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
7-foot-long crocodile enters residential area of mumbai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.