ஓஆா்எஸ் பெயரிலான பானங்கள் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்காது: சுகாதாரத் துறை
வா்த்தக பெயரில் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) என விற்பனை செய்யும் பானங்கள் நீா்ச்சத்து இழப்பை தடுக்காது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வா்த்தக பெயரில் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) என விற்பனை செய்யும் பானங்கள் நீா்ச்சத்து இழப்பை தடுக்காது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:
உப்பு சா்க்கரை கரைசலானது (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதி முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வியா்வை வெளியேறும்போதும், வயிற்றுப்போக்கின்போதும் உடலில் இருந்து குளூக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகளை கணிசமாக இழக்க நேரிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உறுப்பு பாதிப்புகள், உயிரிழப்பு நேரிடலாம்.
உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் வாயிலாக நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க முடியும்.
ஒரு உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டின் 20.5 கிராம் மொத்த எடையில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன. நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டா் தண்ணீரில் ஓஆா்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் பருக வேண்டும்.
மற்றொருபுறம் திரவ நிலையில் பருகுவதற்கு தயாராக உள்ள நிலையிலான உப்பு சா்க்கரை கரைசல் பானங்கள் பல்வேறு வா்த்தகப் பெயா்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
அவை உடலுக்கு புத்துணா்ச்சி ஆற்றலை மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது.
இந்த பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக நீா்ச் சத்து இழப்பை சரி செய்ய இயலாது. அதில், தாது உப்புகள், குளூக்கோஸ் ஆகியவை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய வகையில் இல்லை. அதேவேளையில், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருந்தகங்களில் விற்பனைக்கும் வழங்கப்படுகிறது. எனவே, அதனைப் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு, 104 எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் கூறியுள்ளனா்.