முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

தெலங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.

- கோப்புப்படம்.
பகிர்:

தெலங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் வெள்ளிக்கிழமை உலை(ரியாக்டர்) திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் 8 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தின்போது, ​​பத்து பேர் அந்த இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

Advertisement

இருவர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

வெடிவிபத்தைத் தொடர்ந்து கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்த மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே ஆலையில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

summary

One person was killed and seven others suffered injuries following a reactor blast at a pharma plant in Nalgonda district of Telangana on Friday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.