ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: பிரதமர் பெருமிதம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுதப் படையினர் சிந்தூர் நடவடிக்கையின்போது, இணையற்ற தைரியத்தையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தினர். பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு நம் ஆயுதப் படை தகுந்த பதிலடி கொடுத்தனர். அத்தகைய நம் படைகளின் வீரத்தை ஒட்டுமொத்த தேசமும் வணங்குகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடி மற்றும் நாட்டின் பாதுகாப்பைப் உறுதிசெய்வதில் அசைக்க முடியாத நிலைப்பாட்டை, ஆபரேஷன் சிந்தூர் வெளிக்கொணர்ந்தது. மேலும், நமது படைகளின் தொழில்முறை, ஆயத்த நிலை, ஒருங்கிணைந்த வலிமையையும் சிந்தூர் எடுத்துரைத்தது.
Advertisement
பயங்கரவாதத்தை தோற்கடித்து, அதனை அழிப்பதற்கான நமது தீர்மானத்தில் நாம் எப்போதும்போல உறுதியாக இருக்கிறோம்.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா அடைந்த அசாதாரண வெற்றி, நமது துணிச்சலான வீரர்களின் குறிப்பிடத்தக்க வீரம், தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. நம் வீரர்களின் வெல்ல முடியாத தைரியம், அசைக்க முடியாத உறுதிப்பாடு, கடமைக்கான அர்ப்பணிப்பை எண்ணி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்கிறார்" என்று கூறியுள்ளார்.