தெலங்கானாவில் பிரதமர் மோடி! ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!
காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
ஹைதராபாத் : பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) தெலங்கானாவுக்குச் சென்றார். காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் அவர் ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
கா்நாடகம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் இரு நாள்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். இதற்காக முதலில் இன்ரு காலை பெங்களூரு சென்ற அவர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தெலங்கானா தலைநகா் ஹைதராபாதுக்கு மாலை சென்றடைந்தார்.
அங்கு, வாரங்கல்லில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய ஜவுளி பூங்கா உள்பட ரூ.9,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
Advertisement
இன்றிரவில் குஜராத் மாநிலம், ஜாம்நகரை சென்றடையும் அவா், பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலில் திங்கள்கிழமை (மே 11) நடைபெறும் அமிா்தப் பெருவிழாவில் பங்கேற்கவுள்ளாா்.
முன்னதாக, பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திமுகவை விட்டு காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.