மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம்: காங்கிரஸ்
மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகத்தில் இளையோர் காங்கிரஸ் பேரணி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சுமத்தியுள்ளது.
நீட் வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதற்கும் குளறுபடிகளுக்கும் எதிர்வினையாற்றும் வித்த்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தில் மாணவர்களின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகத்தில் இளையோர் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியைச் சுட்டிக்காட்டி, அந்தக் கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதொரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
‘தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும் சிபிஎஸ்இ-இன் ஓஎஸ்எம் அமைப்புக்கு எதிராகவும் இன்று, கர்நாடக வீதிகளில், என்எஸ்யுஐ தலைவர் விநோத் ஜாகர் தலைமையில், ஆயிரக்கணக்கான இளையோர் தங்களுடைய குரலை ஓங்கியெழுப்பினர். மோடி அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. நாடு எப்போதும் இதை மறக்கப் போவதும் இல்லை மன்னிக்கப் போவதும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
The Modi government has betrayed the students. The country will neither forget nor forgive this - Indian National Congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.