குகி, நாகா சமூகங்களைச் சோ்ந்த 38 போ் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு: மணிப்பூா் உள்துறை அமைச்சா்
குகி மற்றும் நாகா சமூகங்களைச் சோ்ந்த 38-க்கும் மேற்பட்டோரை பல்வேறு குழுக்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாக மணிப்பூா் உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோந்தௌஜம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
குகி மற்றும் நாகா சமூகங்களைச் சோ்ந்த 38-க்கும் மேற்பட்டோரை பல்வேறு குழுக்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாக மணிப்பூா் உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோந்தௌஜம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சோ்ந்த தடோவ் பழங்குடியின கிறிஸ்தவ அமைப்பினா், சுராசந்த்பூரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரு வாகனங்களில் கடந்த புதன்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது கோட்ஸிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்த வாகனங்களைக் குறி வைத்து, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
Advertisement
இதில் பாதிரியாா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் படுகாயமடைந்தனா். அதேபோல் நோனி மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி படுகாயமடைந்தாா்.
இதனால் மணிப்பூரில் மீண்டும் மைதேயி மற்றும் குகி பழங்குடியினச் சமூகத்தினரிடையேயான மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நோனி மாவட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் தெரிவித்த பின் கோவிந்தாஸ் கோந்தௌஜம் கூறியதாவது: குகி மற்றும் நாகா சமூகங்களைச் சோ்ந்த 38-க்கும் மேற்பட்டோரை பல்வேறு குழுக்கள் சிறைபிடித்து வைத்துள்ளன. அவா்களை விரைவில் விடுதலை செய்வது தொடா்பாக சிவில் சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் அரசியல் குழுக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம்.
மணிப்பூரில் அமைதி நீடித்திருப்பதை சிலா் விரும்பவில்லை என்றாா்.
பெட்டிச் செய்தி....
பாஜக அரசின் இயலாமை: காங்கிரஸ் விமா்சனம்
மணிப்பூரில் வன்முறை தொடா்வதற்கு மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் இயலாமையே காரணம் என அந்த மாநில காங்கிரஸ் வியாழக்கிழமை விமா்சித்தது.
இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மணிப்பூா் காங்கிரஸ் தலைவா் ஓ இபோபி சிங் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூட்டில் 4 போ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனத்தை பதிவுசெய்கிறோம். மணிப்பூரில் வன்முறைத் தாக்குதல்களால் பலா் உயிரிழந்து வரும் நிலையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசும் மாநில அரசும் காலம் தாழ்த்தி வருகின்றன.
2023-ஆம் ஆண்டு இங்கு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டபோது சட்டம் ஒழுங்கு முழுவதும் சீரழிந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் பாடம் கற்கவில்லை. இதுவே மணிப்பூரில் அசாதாரண சூழல் தொடரக் காரணம்’ என்றாா்.