முகப்பு
இந்தியா

டி20 உலகக் கோப்பை வெற்றி! இஷான் கிஷனுக்கு ரூ. 1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் அரசு!

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுக்கு பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி ரூ. 1 கோடி வெகுமதி வழங்கினார்...

இஷான் கிஷனுக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி... - எக்ஸ்
பகிர்:

டி20 உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடிய வீரர் இஷான் கிஷனுக்கு பிகார் அரசு ரூ.1 கோடி வெகுமதி வழங்கியுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், அதிக ரன்கள் எடுத்த ஆட்டக்காரர்களில் ஒருவரான இந்திய வீரர் இஷான் கிஷன் 9 இன்னிங்ஸ்களுக்கு 317 ரன்களை குவித்து அசத்தினார். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இஷான் கிஷனின் பங்களிப்பு முக்கியமாதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி இன்று (மே 15) ரூ. 1 கோடி வெகுமதிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

Advertisement

இந்த நிகழ்வில், இஷான் கிஷனின் குடும்பத்தினர் மற்றும் பிகாரைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் சாகிப் ஹுசைன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன் முதல் 7 போட்டிகளில் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக கேப்டனாக களமிறங்கினார். இவரின் தலைமையில் 4 போட்டிகளில் ஹைதராபாத் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

summary

The Bihar government has awarded ₹1 crore to Ishan Kishan who was part of the Indian cricket team that won the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.