முகப்பு
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்த ஆளுநர் ஆர்லேகர்!

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வாகனம் குறைப்பு - video crop
பகிர்:

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக அரசு மற்றும்  தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் செல்லும்போது 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.  இந்த நிலையில் ஆளுநர் ஆர்லேகருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது

ஈரான் போர் பதற்றம் போன்ற சில காரணங்களால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனையடுத்து சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வாகனங்களின்  எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

summary

The number of security vehicles provided to Tamil Nadu's Acting Governor, Rajendra Vishwanath Arlekar, has been reduced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.