பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் கொள்முதல் தொடா்பாக தில்லியில் போலி நிறுவனத்திடம் இருந்து போலி ஜிஎஸ்டி ரசீது வாங்கியதாகப் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் கடந்த மே 9-ஆம் தேதி சஞ்சீவ் அரோரா கைது செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து மே 10-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சீவ் அரோரோ ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை 7 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Advertisement
Advertisement
அதன் பிறகு இரண்டு நாள்கள் அமலாக்கத் துறை காவலை நீதிமன்றம் நீட்டித்தது.
இதையடுத்து, சஞ்சீவ் அரோராவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அவரிடம் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை ஜூன் 1-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதனிடையே சஞ்சீவ் அரோராவிடம் விசாரணை நிறைவு பெற்ாகவும் அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருவதாகவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.