முகப்பு
இந்தியா

வதைக்கும் வெய்யில்.. நாட்டில் அதிக வெப்பம் பதிவான பகுதி இதுதான்! 118 டிகிரி பதிவு

வெய்யிலோ வெய்யில் என்று நாட்டு மக்களை கோடை வெப்பம் வதைத்து வருகிறது.

குழந்தையுடன் குடைபிடித்து செல்லும் பெண் - PTI
பகிர்:

கோடைக்காலம் தொடங்கியது முதலே, மே 20ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து வெப்ப அலை வீசியிருக்கிறது.

நாட்டியே உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா நகரில்தான் நேற்று கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று இந்த நகரில் பதிவான வெய்யில்அளவு 118 டிகிரி ஃபாரன்ஹீட். இது 4.5 டிகிரி அளவுக்கு இயல்பை விட அதிக வெப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, அடுத்து வரும் நாள்களிலும் இந்தப் பகுதியில் கடுமையான வெய்யில் இருக்கும், வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

summary

The scorching sun.. This is the hottest place in the country! 118 degrees recorded

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.