முகப்பு
இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், சோனியா மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியதைப் பற்றி...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல், சோனியா, கார்கே.
பகிர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மாநிலங்களவை எம்.பி. சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் முதல் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரிய ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது மகள் மிராயா வத்ரா, மகன் ரைஹான் வத்ரா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினர்.

summary

Rahul, Sonia, and Kharge paid tribute at the memorial of former Prime Minister Rajiv Gandhi on the occasion of his death anniversary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.