ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி குறித்து...
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். உயர்நீத்த அதே பகுதியில் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அமைந்துள்ளது.
ராஜீவ் காந்தி நினைவு நாளான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிா்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோட்டங்கர், மாவட்டத் தலைவர் அருள்ராஜ், சட்டப்பேரவைக் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, ராஜீவ் காந்தியின் 35 ஆவது நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது. மிகவும் உருக்கமான நிகழ்ச்சி. தலைவர் ராஜீவ் காந்தி தான் பஞ்சாயத்து ராஜ், தி சயின்ஸ் ரெவல்யூஷன் போன்ற பல திட்டங்களை இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கு கொண்டு வந்தவர் என அவர் குறிப்பிட்டார்.
Rajiv Gandhi Memorial Day: Congress Members Pay Floral Tributes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.