10 மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இழப்பு!
நாட்டின் 10 மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் தேஜகூட்டணிக்கு இழப்பு...
நாட்டின் 10 மாநிலங்களில் நடைபெறவுள்ள 26 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் 10 மாநிலங்களில் காலியாகும் 26 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜயா சிங் மற்றும் இணையமைச்சர்கள் ரவ்நீத் சிங் மற்றும் ஜார்ஜ் குரியன் உள்பட சுமார் 24 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முடிவுக்கு வருகின்றது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 26 இடங்களில் பாஜகவின் தேஜகூட்டணி 18 இடங்கள், காங்கிரஸ் 4 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 3 இடங்கள் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவின் தேஜகூட்டணி 17 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களையும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தவெக 1 இடத்தையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆந்திரம், குஜராத், கர்நாடகத்தில் 4 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 இடங்களுக்கும், ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கும் மற்றும் மணிப்பூர், மேகாலயா, அருணாசலம் ஆகிய மாநிலங்களில் தலா 1 இடத்துக்கும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 1 மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
It is reported that the BJP-led NDA is set to lose one seat in the Rajya Sabha elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.