முகப்பு
இந்தியா

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரி! மே 28 வரை நீடிக்கும்

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடும் நிலையில், இது மே 28 வரை நீடிக்கும் என தகவல்.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் - IANS
பகிர்:

நாட்டில் பெரும்பான்மையான பகுதிகள் கோடை வெப்பத்தில் கொடூர பிடியில் சிக்கித் தகித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையானது 118.4 டிகிரியை தொட்டிருக்கிறது.

கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுகாதாரத் துறையினர், மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறார்கரள்.

அதிக நேரம் இந்த வெய்யிலில் இருந்தால், மிக மோசமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

நாட்டின் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும், இதே நிலை மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிகக் கடுமையான வெய்யில், எப்போதும் இல்லாத புழுக்கமான இரவுகள் நீடிக்கும் என்றும், இது மக்களுக்கு மிக மோசமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பாக அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியில் பணியாற்றுவோர், கடுமையான வெய்யில் நேரத்தில் நிழலான இடத்தில் ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

summary

The highest temperature in the country is 118.4 degrees! It will last until May 28th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.