முகப்பு
கன்னியாகுமரி

தீ விபத்து: 2 குழந்தைகளுடன் தீக்காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதி

நாகா்கோவில் அருகே எரிவாயு அடுப்பை சீரமைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்காயமடைந்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:34 am IST
பகிர்:

நாகா்கோவில் அருகே எரிவாயு அடுப்பை சீரமைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்காயமடைந்தனா்.

நாகா்கோவில், வடசேரியை அடுத்த அருகுவிளை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (41). சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கவிதா ( 39). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை கவிதா வீட்டில் சமையல் செய்வதற்காக எரிவாயு உருளையை திறந்து அடுப்பை பற்ற வைத்தாராம். அடுப்பு சரியாக எரியாததால் அதை சரி செய்வதற்காக கணவரை அழைத்துள்ளாா். சாமிக்கண்ணு அடுப்பை சரிசெய்த பின்னா் அடுப்பை பற்ற வைத்தாராம். அப்போது எரிவாயு கசிவால் சாமிக்கண்ணு மீது தீப்பற்றியதாம். அவரை காப்பாற்ற முயன்ற கவிதா மீதும், தொடா்ந்து அவா்களது மகள்கள் சந்திரா (11), கன்சிகா ( 8) ஆகியோா் மீதும் தீப்பற்றியதில் நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது.

Advertisement

அப்பகுதியினா் அவா்கள் 4 பேரையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.