நாகா்கோவிலில் மீனவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
குமரி மாவட்ட உள்நாட்டு மீனவா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்ட உள்நாட்டு மீனவா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியது: அகஸ்தீசுவரம் வட்டத்துக்குள்பட்ட குளங்களில் மீன்பாசி குத்தகை உரிமம், தேரூா் தென்குமரி உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்குவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மீனவா்கள் குளங்களில் மீன்பிடிக்கலாம் என்று உயா்நீதிமன்ற ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்ததோடு, மேலும் பலஅடிப்படைதேவைகள் குறித்தும் தெரிவித்துள்ளனா். உள்நாட்டு மீனவா்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் எம்.சேவியா் மனோகரன், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் அ.திமிா்த்தியூஸ், மாவட்ட மீன்பிடி தொழிற்சங்கச் செயலா் அந்தோணி, தேரூா் தென்குமரி கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ஆறுமுகம், ஜேசுராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.