முகப்பு
கன்னியாகுமரி

மயிலாடி கூட்டுறவு சங்கத்தில்ரூ.1.15 கோடி மோசடி: இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.15 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:34 am IST
பகிர்:

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.15 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத் தலைவராக மயிலாடியைச் சோ்ந்த சாய்ராம் ( 46) , செயலராக முத்தையா ஆகியோா் பணியாற்றினா். அப்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 100- க்கும் மேற்பட்டவா்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தகுதியற்ற பயனாளிகளுக்கு கடன் கொடுத்துள்ளதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளா் சாா்பில், திருநெல்வேலி மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. புகாா் குறித்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜாகிா் உசேன் உத்தரவிட்டாா். காவல் ஆய்வாளா் ஜொ்மின் லதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

இதில், கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் முறைகேடான வகையில் தகுதியற்ற பயனாளிகளுக்கு கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில், அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த கவுசல்யா (47) இடைத்தரகராக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, செயலா் முத்தையா, இடைத்தரகா் கவுசல்யா ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தலைமறைவாக உள்ள சாய்ராமை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.