போக்குவரத்து நெரிசலை தவிா்க்கமேம்பாலப் பணியை தொடங்க வலியுறுத்தல்
தக்கலையில் போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தக்கலையில் போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தக்கலையில் நடைபெற்ற ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவலறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் சி. பால்ராஜ் தலைமை வகித்தாா். நாகா்கோவில் நகரத் தலைவா் ஜாண் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் வசந்தபாய் அறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு அரசு மாநில ஊரக வளா்ச்சித்துறை பயிற்றுநா் எஸ். விஜயலதா உள்பட பலா் பேசினாா்.
தீா்மானங்கள்: தக்கலையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை
Advertisement
Advertisement
விரைந்து தொடங்க வேண்டும். தகவலறியும் உரிமை சட்டம் 2005’ குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். காலாவதியான உணவுப் பண்டங்களை மறுபடியும் முத்திரையிட்டு விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிா்வாகிகள் சேவியா் , ஜாண்ரோஸ், சரஸ்வதி, ரஞ்சன், முகம்மது சபீா், ஜெயகுமாா், மஞ்சு, ராஜேஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா். சட்ட மகளிா் பிரிவு பாதுகாப்புச் செயலா் உமாமகேஷ்வரி வரவேற்றாா். மருத்துவா் லெட்சுமி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.