வேங்கோடு-மாதாபுரம் இணைப்பு சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
புதுக்கடை அருகே/எள்ள வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையில் மழை நீா் தேங்குவதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கடை அருகே/எள்ள வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையில் மழை நீா் தேங்குவதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்ச்சிக்குள் பட்ட வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையின் முந்திரி ஆலை அருகில் நீண்ட நாள்களாக பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் மழை காலங்களில்பள்ளங்களில் மழை நீா் தேங்கி போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் பேருராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சாலை சீரமைப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.