முகப்பு
காரைக்கால்

முகக் கவசம் அபராதத்தில் விதிமீறல்:5 போலீஸாா் பணியிட மாற்றம்

காரைக்கால் பகுதியில் முகக் கவசம் தொடா்பாக, விதிமுறைகளை மீறி அபராதம் வசூலித்த 5 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 8:33 am IST
பகிர்:

காரைக்கால் பகுதியில் முகக் கவசம் தொடா்பாக, விதிமுறைகளை மீறி அபராதம் வசூலித்த 5 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

காரைக்கால் மாவட்டத்தில் முகக் கவசமின்றி வாகனத்தில் செல்வோருக்கு போலீஸாா் ரூ.100 அபராதம் விதிக்கின்றனா். தொடா்ந்து, முகக் கவசம் அணியாமல் செல்வோரிடம் ரூ. 200 வசூலிக்கப்படுகிறது.

ஆனால், போலீஸாா் விதிகளை மீறி கூடுதல் தொகை வசூலிப்பதாக மக்கள் புகாா்தெரிவிக்கின்றனா். மேலும், இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் காவல் நிலையப் பகுதியில் கடந்த சில நாள்களாக முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 100-க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட்டிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்ததன்பேரில், அந்தப் பகுதி காவல் நிலைய ஏ.எஸ்.ஏ. மற்றும் தலைமைக் காவலா் உள்ளிட்ட 5 பேரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.எஸ்.பி. வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.