சிரி... சிரி... 22-03-2026
சமையல் காஸ் தட்டுப்பாட்டை எப்படிச் சமாளிக்கிறாய்?
'சமையல் காஸ் தட்டுப்பாட்டை எப்படிச் சமாளிக்கிறாய்?'
' பச்சைக்காய்கறிகள் சாப்பிட்டுத் தான்..!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'கத்தி சாணைப் பிடிச்சுத் தர்றட்டுமா?'
'ஏன் கத்தாம சைலன்ட்டா பிடிச்சுத் தர்ற முடியாதா?'
-தீபிகா சாரதி, சென்னை.
'கடிகாரக் கடைக்கு வேலைக்குப் போனீயே... ஏன் நின்னுட்டே?'
'நேரம் சரியில்லை!'
-ஜி. சுந்தரராஜன், திருத்தங்கல்.
'தூக்க மாத்திரை போட்டுக் கூடவா தூக்கம் வரல?'
'ஆமாம், தூக்க மாத்திரையை இருட்டுல கீழே போட்டுட்டேன்!'
-வி.சாரதி டேச்சு, சென்னை.
'ஏன் உங்க வீட்டு வாசல்ல திருடன் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு நிக்கறீங்க?'
'நான் வளர்க்கிற நாய் குரைச்சு விரட்டுதான்னு செக் பண்றேன்!'
'மொபைலை முழுங்கிட்டீங்களா... எப்படி?'
'தொண்டையை செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுத்தான், டாக்டர்!'
-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.
'என்ன சர்வர்... தோசையில செடி முளைச்சிருக்கு?'
'சார், இது முளை கட்டின தோசை... செஞ்சு மூணு நாள் ஆச்சு!'
-எம்.பி.தினேஷ், கோவை.
'தாலாட்டுப் பாடியும் குழந்தை தூங்கல...'
'அப்புறம்?'
'அவரை பார்த்துக்கச் சொல்லிட்டு நான் தூங்கிட்டேன்!'
'ஷாக் டிரீட்மென்ட் கொடுக்கவா?'
'என்ன ஷாக்... கரன்ட் ஷாக்கா டாக்டர்?'
'பில் ஷாக்!'
'வடைக்கு எந்த எண்ணெய் யூஸ் பண்றீங்க?'
'நிச்சயமாக கச்சா எண்ணெய் இல்லை... தைரியமா சாப்பிடுங்க!'
'வெளியே கிளம்பும் போது என்னைப் பார்த்து ஏன் கும்பிடு போடுறே?'
'தும்மல் போடாம இருந்ததுக்கு நன்றி சொல்றேன்.'
' காபிக்கு ஒரு தடவை தாங்ஸ் சொல்லிட்டு மீண்டும் எதற்காக இன்னொரு தாங்ஸ்?'
'இது அடுத்த காபிக்கு அட்வான்ஸ் தாங்ஸ்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'சமயோசிதமாகப் பாடுவதில் கைத்தேர்ந்தவர் இப்புலவர்!'
'எப்படிச் சொல்கிறீர்?'
'போருக்கு முந்தி என்றால் விருத்தப்பாவும், போருக்குப் பிறகு என்றால் வருத்தப்பாவும் பாடுவார்!'
'தூங்கறவங்களை எழுப்பறது மகாபாவம்னு நினைக்கிறவர் நம்ப மானேஜர்!'
'அதுக்காக, நான் தூங்கினேன்னு என்னை ஆபீசுக்குள்ளேயே வச்சு பூட்டிட்டு வீட்டுக்குக் கிளம்பறது
எந்தவிதத்துல சார் நியாயம்?'
'நீ ஏன் உன்னைவிட அதிகமா படிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டே?'
'குறைவா படிச்ச பொண்ணே கிடைக்கலை, சார்!'
'சரி, நீ என்னதான் படிச்சிருக்கே?'
'ஆறாங்கிளாஸ் முடிச்சிருக்கேன், சார்!'
'உங்க பையன் சாப்பிடத்தான் சார் லாயக்கு!'
'ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'
'பிரயாணின்னு எழுதச் சொன்னா, 'பிரியாணி'ன்னு எழுதறான், சார்!'
-வி.ரேவதி, தஞ்சை.