ஆம்னி பஸ் டேங்கர் லாரியுடன் மோதி கோர தீ விபத்து: 7 பேர் பலி
ஈரோடு, நவ.6: ஈரோடு பவானி அருகே சித்தோடு என்ற இடத்தில், அதிகாலை 3.45 மணி அளவில், பெங்களூருவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ்ஸும் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்தது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த
ஈரோடு, நவ.6: ஈரோடு பவானி அருகே சித்தோடு என்ற இடத்தில், அதிகாலை 3.45 மணி அளவில், பெங்களூருவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ்ஸும் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்தது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 7 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பஸ் டிரைவரும் பலியானார். மேலும் 23 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஈரோடு, கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடுவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதில், பஸ் ஓட்டுநர் சசிகுமார், பெங்களூரு பயணி கிரண்பாய் மற்றும் நால்வர் கோவையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.