இலங்கை ராணுவ வீரர்களை வெளியேற்ற வேண்டும்: யுவராஜா
ஈரோடு, ஆக., 29 : தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எம் யுவராஜா ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை வெலிங்டன் பயிற்சி முகாமில், பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ அத
ஈரோடு, ஆக., 29 : தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எம் யுவராஜா ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை வெலிங்டன் பயிற்சி முகாமில், பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ அதிகாரிகளை நாட்டை வெட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது. இலங்கை நட்பு நாடு போல செயல்படுவதில்லை. இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளித்தால் அது தமிழக மீனவர்களையும், அங்குளள இலங்கை தமிழர்களையும் தாக்கவே பயன்படும். ஆகவே இலங்கை ராணுவ அதிகாரிகளை இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.