முகப்பு
தற்போதைய செய்திகள்

உலக நன்மை வேண்டி திருவாவடுதுறை ஆதீனம் ஆன்மிக பயணம்

உலக நன்மை வேண்டி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள திருவாவடுதுறை மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரியார் அனைத்து கோயில்களிலும் சென்று வழிபட ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

உலக நன்மை வேண்டி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள திருவாவடுதுறை மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரியார் அனைத்து கோயில்களிலும் சென்று வழிபட ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிதம்பரம் ஸ்ரீமெய்கண்டநாதர் கோயிலுக்கு அம்பலவாண தேசிக பராமாச்சாரியார் சுவாமிகள் வியாழக்கிழமை வருகை தந்தார். அவரை இந்து ஆலய பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் செந்தில்குமார், ஜோதி குருவாயூரப்பன், இந்து முன்னணி நிர்வாகிகள் குருமூர்த்தி, பாண்டியன், முரளீதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றார்.

அவரை கோயில் பொதுதீட்சிதர்கள் மேள, தாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயிலில் சித்சபை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை அவர் தரிச்சித்தார். கோயில் பொதுதீட்சிதர்கள் சிறப்பு ஆராதனை செய்து பிரசாதத்தை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.