தருமபுரி அருகே பைக் மீது பஸ் மோதி ஒருவர் பலி
தருமபுரி அருகே சோமனஹள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது நகரப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
தருமபுரி அருகே சோமனஹள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது நகரப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பலியானார். அந்த இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த சின்னசாமி, முனுசாமி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.