காட்டுமன்னார்கோயில் அருகே பிடிபட்ட 8 அடி நீள ராட்சத முதலை
காட்டுமன்னார்கோயில் அருகே மெயின்ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படுத்துக் கிடந்த 8 அடி நீளமுள்ள ராட்சத முதலையை தீயணைபபு மீட்புத்துறை மற்றும் வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே மெயின்ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படுத்துக் கிடந்த 8 அடி நீளமுள்ள ராட்சத முதலையை தீயணைபபு மீட்புத்துறை மற்றும் வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூர் மெயின்ரோட்டில் ராட்சத முதலை ஒன்று படுத்துக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு மீட்புத்துறையினர் அங்கு சென்று சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள, சுமார் 600 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து கட்டிப் போட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் உத்தரவின்படி வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் ஆகியோர் சென்று முதலையை பெற்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு விட்டனர்.