துண்டாவிற்கு மேலும் 7 நாட்கள் காவல் நீடிப்பு
மும்பை, ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல்
மும்பை, ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் (எ) துண்டா கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துண்டாவின் காவல் முடிவடந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். இந்நிலையில் தீவிரவாதி துண்டாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர். இதனை அடுத்து துண்டாவை கூடுதலாக 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.