விருதுநகர் அருகே சாமி கும்பிடச் சென்ற பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
விருதுநகர் அருகே சாமி வழிபாடு நிகழ்ச்சிக்கு சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
விருதுநகர் அருகே சாமி வழிபாடு நிகழ்ச்சிக்கு சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(47). இவரது மனைவி மஞ்சு(24). இவர் புதன்கிழமை மாலையில் விருதுநகர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வழிபாடு செய்யப் போவதாக கூறிச் சென்றாராம். ஆனால், இதுவரையில் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்ததில் மஞ்சு பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸாரிடம் ஜெகதீசன் புகார் செய்தார். அதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்து காணமல் போனவர் குறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.