முகப்பு
தற்போதைய செய்திகள்

பெரம்பலூரில் ரூ. 80 கோடியில் புதிய பால் பண்ணை

பெரம்பலூரில் ரூ. 80 கோடியில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

Updated On : 9 ஏப்ரல், 2013 at 8:24 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:43 PM

பெரம்பலூரில் ரூ. 80 கோடியில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பெரம்பலூரில் நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை அமைக்கப்படும்.

Advertisement

இதற்காக செங்குணம் கிராமத்தில் 50 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகால குத்தகைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 80 கோடியில் இந்த புதிய பால் பண்ணை அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.