முகப்பு
தற்போதைய செய்திகள்

காசநோய் மருத்துவமனைக்கு ரூ.75 ஆயிரம் நிதி வசூலித்து வழங்கிய சிதம்பரம் பள்ளி மாணவர்கள்!

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் என்ற நிறுவனம் காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அளவில் பல்வேறு கிளைகளை கொண்டு 17 மருத்துவமனைகளை நிறுவி சேவை செய்து வருகிறது. ஆண்டு தோறும் இம்மருத்துவமனைக்கு சிதம்பரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

காசநோய் மருத்துவமனைக்கு சிதம்பரம் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரூ.75 நிதியினை வசூலித்து வழங்கியுள்ளனர்.

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் என்ற நிறுவனம் காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அளவில் பல்வேறு கிளைகளை கொண்டு 17 மருத்துவமனைகளை நிறுவி சேவை செய்து வருகிறது. ஆண்டு தோறும் இம்மருத்துவமனைக்கு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நிதிதிரட்டி வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரூ.75 ஆயிரம் நிதியினை திரட்டி வழங்கியுள்ளனர். இதில் பளளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஷைலோ ஜெசி பிரான்சிஸ்கா மட்டும் ரூ.38 ஆயிரத்தை சேமித்து வழங்கியுள்ளார் என்பதும், இதுவரை இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரூ.11 லட்சம் நிதியை திரட்டி வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் திரட்டிய நிதி ரூ.75 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன், இந்தியன் டெவல்ப்மெண்ட் பவுண்டேஷன் நிறுவன தென் மண்டல மேலாளர் ஸ்ரீராமிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆசிர்ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →