முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக ஆசிரியர்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:18 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் நிர்வாகத்திற்கு எதிரான கோஷங்களுடன் ஊர்வலமாக சென்று நிர்வாக அலுவலகக் கட்டடம், பூமா கோயில், ஊழியர் சங்க அலுவலக கட்டடம் ஆகியவற்றின் முன்பு வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு ஆசிரியர்- ஊழியர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →