அருப்புக்கோட்டை மரக்கடையில் தீ
அருப்புக்கோட்டையில் மரக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மரப்பொருள்கள் எரிந்து நாசமாயின.
அருப்புக்கோட்டையில் மரக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மரப்பொருள்கள் எரிந்து நாசமாயின.
ராகவன் என்பவருக்குச் சொந்தமான மர குடோன் ஒன்று, அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ளது. இங்கே மரம் அறுத்தல், மரம் இழைத்தல், அழகு செய்தல் ஆகிவையும் செய்யப்படுகின்றது. இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக இந்த குடோனில் தீப்பிடித்தது. இதை அடுத்து தீ மள மள வென்று பரவி குடோனில் மரப் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மரப் பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் வேகமாக வந்து தீயை அணைத்தனர். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.