பெண்ணிடம் 4 பவுன் தாலிக்கொடி பறிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம், வெங்கடேஷ் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரகுராமன் மனைவி உமாமகேசுவரி(34). பள்ளி விடுமுறையானதால், குழந்தைகளை அழைத்துக்கொண்டு, திருப்பூர் கணக்கம்பாளையத்தில் உள்ள
பெருமாநல்லூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 4பவுன் தாலிக்கொடியை மர்ம நபர் பறித்துச்சென்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம், வெங்கடேஷ் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரகுராமன் மனைவி உமாமகேசுவரி(34). பள்ளி விடுமுறையானதால், குழந்தைகளை அழைத்துக்கொண்டு, திருப்பூர் கணக்கம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இவர் நேற்று(திங்கள்கிழமை) மாலை மளிகைக்கடைக்கு வந்துள்ளார். பின்பு வாஷிங்டன் நகர் செல்லும் வழியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், உமாமகேசுவரியின் கழுத்தில் அணிந்திருந்த, 4 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்தச் சென்று வி்ட்டார். இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.