முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிரபல  தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On : 25 ஏப்ரல், 2013 at 5:32 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:57 PM

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிரபல  தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இதில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 8-வது, 10,12 மற்றும் பட்டம், பட்டயம், தொழிற் பயிற்சி ஆகியவைகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இதில், பங்கேற்பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த வகையிலும் பாதிக்காது.

Advertisement

இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது. அதனால், சுற்றுக்கிராம பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.