முகப்பு
தற்போதைய செய்திகள்

குப்பையில் கிடந்த வெடிகள் வெடித்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை புதுகுப்பத்தில் முத்தாளம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற கடந்த 2 தினங்களாக திருவிழா வானவேடிக்கை மற்றும் வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:29 AM
பகிர்:

சிதம்பரம் அருகே குப்பையில் கிடந்த வெடிகளை சேகரித்து கொளுத்திய போது வெடித்து 3 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை புதுகுப்பத்தில் முத்தாளம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற கடந்த 2 தினங்களாக திருவிழா வானவேடிக்கை மற்றும் வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டன. இந்நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் சசிக்குமார் (11), பிரவீன்குமார் (9), நாகராஜன் மகன் நவீன்குமார் (7) உள்ளிட்ட சிறுவர்கள் அங்கு குப்பையில் கிடந்த வெடிகளை சேகரித்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

அப்போது அதிலிருந்து வெடிக்காத வெடிகள் சரமாரியாக வெடித்தத்தில் மூவரும் படுகாயம் அடைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிறுவன் நவீன்குமார் கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அச்சிறுவனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

முழு கட்டுரையைப் படிக்க →