முகப்பு
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் பேராசிரியையிடம் 6 சவரன் நகை திருட்டு

அருப்புக்கோட்டையில் நடந்த சென்ற பேராசிரியையிடம் 6 சவரன் நகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Updated On : 17 ஆகஸ்ட், 2013 at 11:14 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:46 PM

அருப்புக்கோட்டையில் நடந்த சென்ற பேராசிரியையிடம் 6 சவரன் நகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கம் நகரில் ஜவஹர் தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி. இவர் துபையில் பணியிலிருந்து வருகிறார். இவரது மனைவி விமலாதேவி(41) இங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து கடைவீதிக்கு பொருள்கள் வாங்குவதற்காக தனது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் விமலாதேவியின் கழுத்தில் கிடந்த 6 சவரன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.

    இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் விமலாதேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.