வில்லாபுரம் பைனான்சியர் கொலை வழக்கில் வாலிபர் கைது..
அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் பைனான்சியர் கொலை வழக்கில் சனிக்கிழமை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் பைனான்சியர் கொலை வழக்கில் சனிக்கிழமை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலணியை சேர்ந்தவர் போஸ்ராமன்(61).அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.இவரை கடந்த ஜீலை 1.ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்துராமன்(25) ஏற்கனவே ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் இக்கொலை தொடர்பாக முத்துராமன் அண்ணன் கண்ணன்(28)சனிக்கிழமை அவனியாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.