சிதம்பரத்தில் நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: பி.எஸ்.ஞானதேசிகன் பங்கேற்பு
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சந்தித்து பேசுகிறார்.
சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமி்ட்டி தலைவரின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (ஆக 27) செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சந்தித்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.