சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை: போலீஸில் புகார்
சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை என நீதிமன்ற உதவியாளர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை என நீதிமன்ற உதவியாளர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் நீதிமன்ற உதவியாளராக பணியாற்றுபவர் ஸ்ரீதரன். இவர் திங்கள்கிழமை காலை பஸ்நிலையத்திற்கு வந்த போது தன்னிடம் இருந்த 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற சாவியும், வெளிக்கதவு சாவியையும் காணாமல் போனது என சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.