முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி உணவகங்களில் பல்கலை. நிர்வாகி திடீர் சோதனை!

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் உள்ள ராணி சீதை ஆச்சி விடுதி உணவகத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று சென்று திடீர் ஆய்வு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:25 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி உணவகங்களை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் உள்ள ராணி சீதை ஆச்சி விடுதி உணவகத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகத்தில் உள்ள சமையலறை வெளியே உள்ள கழிவுநீர் குட்டையை ஐந்து தினங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்கலைக்கழக பணிப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சமையலறையில் தயாரிக்கப்பட்டுள்ள உணவு தரமாக உள்ளதா? என சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியுள்ள உணவு பட்டியல்படி வாரம் முழுவதும் மூன்று வேளையும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்குமாறும், சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உணவுவிடுதி ஒப்பந்தக்காரரிடம் அறிவுறுத்தினார். பின்னர் பொறியியல் புல வளாகத்தில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேநீர் விடுதியினை பார்வையிட்டு தரமான சமோசா, தேநீர், காபி மற்றும் உணவு பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது பதிவாளர் (பொறுப்பு) ந.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர் டி.கிருஸ்துராஜ் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் உடன் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →