சிதம்பரம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் திரண்ட மக்கள்
சிதம்பரம் அருகே உசுப்பூர் ஐயனார் கோயில் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவரது வீட்டில் 40 ஆண்டு கால பழமை வாந்த வேம்பமரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தை தினமும் கும்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிவதை கண்டு
சிதம்பரம் அருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிந்ததால், அப்பகுதி மக்கள் திரண்டு வேப்ப மரத்தை சுத்தி வந்து கும்பிட்டனர்.
சிதம்பரம் அருகே உசுப்பூர் ஐயனார் கோயில் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவரது வீட்டில் 40 ஆண்டு கால பழமை வாந்த வேம்பமரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தை தினமும் கும்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வேப்பமரத்தின் கிளையிலிருந்து பால் வடிவதை கண்டு அம்மன் வந்ததாகக கருதி பூஜை செய்தனர். இதனை காண அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து வேப்ப மரத்தை சுற்றி வந்து சூடம் ஏற்றி தரிசித்து செல்கின்றனர்.