முகப்பு
தற்போதைய செய்திகள்

சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு மற்றும் மூத்த வழக்கறிஞரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான எம்.

தற்போதைய செய்திகள்

சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு மற்றும் மூத்த வழக்கறிஞரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான எம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:12 AM
பகிர்:

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு மற்றும் மூத்த வழக்கறிஞரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான எம்.சொக்கலிங்கத்திற்கு பாராட்டு விழா ஆகியவை தூத்துக்குடி டிஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவின்போது, மாநாட்டு சிறப்பு மலரை நீலலோகிததாசன் வெளியிட முதல் பிரதியை முகம்மது இஸ்மாயில் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,

சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியை வரட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.தூத்துக்குடியில் இருந்து இரவு நேர விமான சேவை தொடங்க வேண்டும். தூத்துக்குடி- கொழும்பு இடையேயான பயணிகள் கப்பலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் பழுதான நிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →