வீட்டின் பூட்டை உடைத்து 20சவரன் நகை கொள்ளை
மீஞ்சூர் அடுத்த வல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரில் வசித்து வருபவர் குபேரவல்லி(55). இவருக்கு 3பெண்கள் உள்ளனர். 3பேருக்கும் திருமணம் செய்து
மீஞ்சூர் அடுத்த வல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரில் வசித்து வருபவர் குபேரவல்லி(55). இவருக்கு 3பெண்கள் உள்ளனர். 3பேருக்கும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு அவர்கள் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு கடந்த 1-ம் தேதி குபேரவல்லி சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை குபேரவல்லியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து குபேரவல்லி வந்து பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் 20 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்