முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர பட்டயப் படிப்பிற்கு ஜூலை 12-ல் கலந்தாய்வு
சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பகுதி நேர (Part-Time) பட்டயப் படிப்பு அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 12-ம் தேதி
சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பகுதி நேர (Part-Time) பட்டயப் படிப்பு அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப்படுத்தி, கலந்தாய்விற்கு அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் விபரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 2013-14 ஆண்டிற்கான முழு நேர பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 10-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்