மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
மதுரை திருநகரைச் சேர்ந்த பிஎஸ்ஆர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கடந்த ஜூலை 11ம் தேதி பள்ளி மூலம் தூத்துக்குடி
மதுரை திருநகரைச் சேர்ந்த பிஎஸ்ஆர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கடந்த ஜூலை 11ம் தேதி பள்ளி மூலம் தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றபோது, 4 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும் பெற்றோர்கள் இன்று காலை பள்ளி முன் கூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.