பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
ஜூலை 9ம் தேதி, தான் காதலித்த இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.