பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், இப்போது பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷும் கொலை செய்யப்பட்டுள்ளது இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.