தற்போதைய செய்திகள்

கடலூரில் மீன்பிடிக்கச் சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உத்ராபதி மகன் ஆனந்தராமன் (18), அதேப் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சங்கேஸ்வரனுடன் (19) திங்களன்று துறைமுக முகத்துவாரமான பரவனாறு பகுதியில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்றார்.

அப்போது திடிரென கட்டுமரம் கவிழ்ந்ததில் இருவரும் தண்ணீரில் விழுந்தனர். ஆனால், சங்கேஸ்வரன் நீந்தி கரையேறினார். ஆனந்தராமனை காணவில்லை. தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு முழுவதும் தேடினர். இதற்கிடையே இன்று காலை துறைமுகம் அருகே அவரது உடல் கரைஒதுங்கியது. ஆனந்தராமன் ஐடிஐயில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT